இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
தொகுப்பாளினியான அர்ச்சனா, பிக்பாஸ்-4 நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளை அருகே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதையடுத்து வீடு திரும்பியவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து தற்போது ஒருதகவல் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அதில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 10 நாட்களுக்கு பிறகு தான் வீடு திரும்பினேன். எனது மூக்கு வழியாகத்தான ஆபரேசன் நடைபெற்றது. அதனால் பழைய குரல் இன்னும் வரவில்லை. அது வெயிட் குறந்து விட்டேன். தற்போது மீட்புக்கான கடின பாதையில் இருக்கிறேன்.
வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை மாற்ற விரும்புகிறேன், இன்றே முழுமையாக வாழுங்கள், ஏனென்றால் நாளை இருக்குமா என்று உங்களுக்குத்தெரியாதுஎன்று தெரிவித்துள்ள அர்ச்சனா, 24 மணி நேரமுக் கண் தூங்காமல் தன்னை கவனித்துக்கொண்ட நர்ஸ்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு நான் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு வழக்கம் போல் மீடியா பணிகளுக்கு திரும்பி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.