விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

சர்ச்சை பேச்சால் சிக்கியுள்ள நடிகை மீரா மிதுன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மாடல் அழகி போட்டிகளில் கலந்து கொண்டிருந்த மீரா மிதுன் சினிமா மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் நடிகையாக திரையில் தோன்றினார். எப்போதும் சர்ச்சையாக கருத்துகளை கூறி பொதுவெளியில் சிக்கிக்கொள்ளும் மீரா மிதுனை பலரும் தொடர்ந்து கண்டித்தும் வந்தனர்.  நெட்டிசன்களும் தங்களது பங்கிற்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ட்ரோல் செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது அவர் பேசிய பேச்சு இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் எஸ்சி எஸ்டி மக்களை குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். சினிமாத்துறையே அவர்களால் தான் மோசமாக உள்ளது என்றும் கூறியிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் மீரா மிதுனுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 
இதற்கிடையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். புகாரை எடுத்துகொண்ட காவல்துறையினர் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிய வருகிறது.