லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 9-ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது பிறந்த நாளில் ரசிகர்களை பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதை பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை கொண்டாட எனது பிறந்தநாளில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிவுகளை எனக்கும் டேக் செய்யுங்கள். அப்போதுதான் நான் அதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.
தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது.