'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் ரோஜா. ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். நகரி தொகுதியில் இருந்து அவர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வரும் நடிகை ரோஜா, அவ்வப்போது தனது சொந்த தொகுதியான நகரி தொகுதியில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நகரி தொகுதியில் உள்ள பறை இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
அப்போது பறை இசைக் கலைஞர்களின் இசையை அவர் சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நடிகை ரோஜா ஒரு கட்டத்தில் திடீரென்று எழுந்து அவரே பறை இசையை இசைக்க தொடங்கினார். இசைக் கலைஞர்களுடன் நடிகை ரோஜா பறையிசை இசைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு இதேபோல் ரோஜா மாணவர்களுடன் கபடி விளையாடிய வீடியோ வைரலானது.