பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் சமரசம் | பிளாஷ்பேக் : விஜய்க்கு 6 வயது... ஷோபாவை 2வது முறை திருமணம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : டீ கடையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹீரோயின் | முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த 'மிராய்' | 'கங்குவா' கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர்' என எச்சரிக்கை | கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' |
ஹிந்தியில் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்சய்குமார், ஹூமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பை திரில்லர் படம் பெல்பாட்டம். இந்த படத்தை கொரோனா தொற்று காரணமாக ஓடிடியில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து பெல்பாட்டம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என்று அறிவித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அக்சய்குமார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்திருப்பதால் ஆகஸ்ட் 19-ந்தேதி பெல்பாட்டம் படத்தை தியேட்டரில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், கொரோனா லாக் டவுனுக்கு பிறகு ரசிகர்களுக்கு தியேட்டர்களுக்கு வரும் ஆர்வம் குறைந்து விட்டதால், அவர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியாக பெல்பாட் டம் படத்தை 3டியில் வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.