ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ஹிந்தியில் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்சய்குமார், ஹூமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பை திரில்லர் படம் பெல்பாட்டம். இந்த படத்தை கொரோனா தொற்று காரணமாக ஓடிடியில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து பெல்பாட்டம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என்று அறிவித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அக்சய்குமார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்திருப்பதால் ஆகஸ்ட் 19-ந்தேதி பெல்பாட்டம் படத்தை தியேட்டரில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், கொரோனா லாக் டவுனுக்கு பிறகு ரசிகர்களுக்கு தியேட்டர்களுக்கு வரும் ஆர்வம் குறைந்து விட்டதால், அவர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியாக பெல்பாட் டம் படத்தை 3டியில் வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.