நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
'த பேமிலி மேன் 2' என்ற சர்ச்சைத் தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கும் வெப் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தொடரில் ஹிந்தி நடிகரான ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
'த பேமிலி மேன் 2' தொடரையும், அப்படத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி தவறான சில கருத்துக்களை முன் வைத்த ராஜ், டிகே படங்களையும் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் சினிமா உலகில் சிலரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் சேதுபதி, ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பில் நேற்று முதல் நடித்து வருகிறார். அடுத்து அவர்கள் தயாரிக்க உள்ள ஒரு பான்-இந்தியா படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளாராம்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இருவரும் அப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். சுந்தீப் கிஷன் தனது டுவிட்டரில், “பெரிய அண்ணன் மீதான அன்பு. ஒன் அன்ட் ஒன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விரைவில்,” என பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் வெப் தொடர், தயாரிப்பில் ஒரு படம் என விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.