வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஒரு காலத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் அளிக்கும் பேட்டிகளில் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தங்களது கனவு என்பார்கள். அதன்பிறகு வந்தவர்கள் விஜய், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது அது கொஞ்சம் மாறி உள்ளது.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வந்தபோது தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறி வந்தார் மாளவிகா மோகனன். அவர் ஆசைப்பட்டது போலவே உடனடியாக தனுஷின் 43ஆவது படத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து விடடது.
இந்தநிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயனும் தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது பெரும் கனவாக உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதோடு தனுஷின் பர்பாமென்ஸ் பற்றியும் தனது வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மாளவிகா மோகனனின் கனவு நனவானதைப்போன்று துஷாராவின் கனவும் நனவாகுமா?