ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஒரு காலத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் அளிக்கும் பேட்டிகளில் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தங்களது கனவு என்பார்கள். அதன்பிறகு வந்தவர்கள் விஜய், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது அது கொஞ்சம் மாறி உள்ளது.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வந்தபோது தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறி வந்தார் மாளவிகா மோகனன். அவர் ஆசைப்பட்டது போலவே உடனடியாக தனுஷின் 43ஆவது படத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து விடடது.
இந்தநிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயனும் தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது பெரும் கனவாக உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதோடு தனுஷின் பர்பாமென்ஸ் பற்றியும் தனது வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மாளவிகா மோகனனின் கனவு நனவானதைப்போன்று துஷாராவின் கனவும் நனவாகுமா?