'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
ஒரு காலத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் அளிக்கும் பேட்டிகளில் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தங்களது கனவு என்பார்கள். அதன்பிறகு வந்தவர்கள் விஜய், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது அது கொஞ்சம் மாறி உள்ளது.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வந்தபோது தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறி வந்தார் மாளவிகா மோகனன். அவர் ஆசைப்பட்டது போலவே உடனடியாக தனுஷின் 43ஆவது படத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து விடடது.
இந்தநிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயனும் தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது பெரும் கனவாக உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதோடு தனுஷின் பர்பாமென்ஸ் பற்றியும் தனது வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மாளவிகா மோகனனின் கனவு நனவானதைப்போன்று துஷாராவின் கனவும் நனவாகுமா?