'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். மண் பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார். மகிந்த அபேசிங்கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை குவித்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய உள்ள பெரும்பாண்மையான கலைஞர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தியேட்டரில் அல்லது ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது.