இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம்.
கொரோனா அலை சமயம் படப்பிடிப்பை நடத்துவது கடினமான ஒன்று. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டும், அதையும் சீக்கிரம் முடிப்போம் என சமீபத்தில் 'நவரசா' பற்றிய பேட்டிகளில் மணிரத்னம் சொல்லியிருந்தார். அப்படியென்றால் தற்போது ஆரம்பமாகியுள்ளது கடைசி கட்ட படப்பிடிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
படப்பிடிப்பு, முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முடிந்த பின் அடுத்த வருடம் இப்படம் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரையில் படம் பற்றிய முதல் அறிவிப்பிற்குப் பிறகு வேறு எந்தவிதமான போஸ்டர்களையோ, புகைப்படங்களையோ படக்குழு வெளியிடாதது 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.