‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம்.
கொரோனா அலை சமயம் படப்பிடிப்பை நடத்துவது கடினமான ஒன்று. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டும், அதையும் சீக்கிரம் முடிப்போம் என சமீபத்தில் 'நவரசா' பற்றிய பேட்டிகளில் மணிரத்னம் சொல்லியிருந்தார். அப்படியென்றால் தற்போது ஆரம்பமாகியுள்ளது கடைசி கட்ட படப்பிடிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
படப்பிடிப்பு, முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முடிந்த பின் அடுத்த வருடம் இப்படம் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரையில் படம் பற்றிய முதல் அறிவிப்பிற்குப் பிறகு வேறு எந்தவிதமான போஸ்டர்களையோ, புகைப்படங்களையோ படக்குழு வெளியிடாதது 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.