மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்திலும் ஆந்திராவிலும் படப்பிடிப்பு நடத்த, அந்த மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கேரள அரசு இப்போது வரை அந்த மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதேசமயம் பாரபட்சமாக சீரியல் படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து சினிமா தொழிலாளர் அமைப்பின் தலைவரான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் கேரள முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனாலும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் மோகன்லால் பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புரோ டாடி உள்பட பெரிய படங்கள் தங்களது படப்பிடிப்பை நடத்துவதற்காக தமிழகம் மற்றும் ஆந்திராவை நோக்கி கிளம்பி விட்டார்கள்.