கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
ஜெயம் ரவி அடுத்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுடன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு பூலோகம் திரைப்படம் வெளியாகியது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைய உள்ளனர். ஜெயம் ரவியின் 28-வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் தாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
'யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்', 'குட்டி' போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் டி44 படத்தின் படப்பிடிப்பை தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஹன்சிகா தனுஷுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அதேநேரம் நடிகை நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
வேகமாக வளரும் பிரியா பவானி சங்கர் ஜெயம் ரவி, தனுஷ் என 2 முன்னணி நடிகர்கள் படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.