தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது கோல்கட்டாவில் நடந்து வருகிறது. அதற்காக படத்தின் நாயகன் ரஜினிகாந்த் கோல்கட்டா சென்றுள்ளார்.
ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானது. கொரோனா இரண்டாவது அலையின் போதும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.
அதன்பின் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இங்கு சில நாள் ஓய்விற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவற்றை முடித்து விட்டு சென்னை திரும்பினார். இரண்டு நாட்களுக்கு முன்பு மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசி, தனது அரசியல் பிரவேசத்தின் விட்ட குறை தொட்ட குறையையும் முடித்து வைத்தார். தனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
அந்த சூட்டோடு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். திரும்பி வந்த பின் அவரது புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகும்.