'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான நான்கு சங்கங்கள் தான் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் கில்டு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என நான்கு சங்கள் தான் அவை. இவற்றோடு டிஆர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் உள்ளது. இந்த சங்கம் செயல்படுகிறதா இல்லையா என்பது வெளியில் தெரியாமல் உள்ளது.
இவற்றில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் சில முக்கியமான பெரிய தயாரிப்பாளர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த சங்கம் தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றை அந்த சங்கத்தினர் மறுத்துள்ளனர்.
இது குறித்து டுவிட்டர் தளத்தில், “செய்திகள் தவறானவை. எங்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக நாங்கள் தனித்த சங்கமாகத்தான் தொடர்ந்து செயல்படுவோம். அதே சமயம் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரச்சினைகளுக்காக சேம்பர், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் நாங்கள் தனித்தே இருப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து தாய் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்தான் முதல்வரை சில முறை சந்தித்துள்ளனர்.