இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான நான்கு சங்கங்கள் தான் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் கில்டு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என நான்கு சங்கள் தான் அவை. இவற்றோடு டிஆர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் உள்ளது. இந்த சங்கம் செயல்படுகிறதா இல்லையா என்பது வெளியில் தெரியாமல் உள்ளது.
இவற்றில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் சில முக்கியமான பெரிய தயாரிப்பாளர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த சங்கம் தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றை அந்த சங்கத்தினர் மறுத்துள்ளனர்.
இது குறித்து டுவிட்டர் தளத்தில், “செய்திகள் தவறானவை. எங்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக நாங்கள் தனித்த சங்கமாகத்தான் தொடர்ந்து செயல்படுவோம். அதே சமயம் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரச்சினைகளுக்காக சேம்பர், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் நாங்கள் தனித்தே இருப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து தாய் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்தான் முதல்வரை சில முறை சந்தித்துள்ளனர்.