கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சன்னி லியோன் யார் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இதுவரையில் தனது கிளாமர் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்களை மட்டுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வந்த சன்னி லியோன் நேற்று வித்தியாசமாக சமூக அக்கறையுடன் ஒரு பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்துத்தான் சன்னி லியோன் பதிவு அமைந்துள்ளது.
சைக்கிளுடன் நிற்கும் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு, “கடைசியாக 100 ரூபாயைக் கடந்துவிட்டது. உங்கள் உடல்நலனில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். சைக்கிளிங் தான் புதிய கிளாமர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சன்னி லியோனின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் இனி சைக்கிளில் சென்றால் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய கவலையும் இருக்காது, உடல்நலனுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.