என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாட்டில் உள்ள பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களைத் திறக்க ஒவ்வொரு மாநிலமாக சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுமதி வழங்கி வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் ஜுன் 20ம் தேதி முதலே தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு தியேட்டர்களைத் திறக்கவில்லை. இதனிடையே, ஆந்திராவில் ஜுலை 8 முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 5 மணி வரையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தெலுங்குத் திரையுலகினல் தியேட்டர்களைத் திறப்பது பற்றி விவாதிக்க உள்ளனர். ஆந்திராவில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணங்கள் குறித்த பிரச்சினையும், தெலங்கானாவில் தியேட்டர்களுக்கான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளன. இது பற்றியெல்லாம் பேசி முடித்த பிறகுதான் தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்வார்களாம்.