நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாட்டில் உள்ள பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களைத் திறக்க ஒவ்வொரு மாநிலமாக சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுமதி வழங்கி வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் ஜுன் 20ம் தேதி முதலே தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு தியேட்டர்களைத் திறக்கவில்லை. இதனிடையே, ஆந்திராவில் ஜுலை 8 முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 5 மணி வரையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தெலுங்குத் திரையுலகினல் தியேட்டர்களைத் திறப்பது பற்றி விவாதிக்க உள்ளனர். ஆந்திராவில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணங்கள் குறித்த பிரச்சினையும், தெலங்கானாவில் தியேட்டர்களுக்கான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளன. இது பற்றியெல்லாம் பேசி முடித்த பிறகுதான் தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்வார்களாம்.