காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாட்டில் உள்ள பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களைத் திறக்க ஒவ்வொரு மாநிலமாக சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுமதி வழங்கி வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் ஜுன் 20ம் தேதி முதலே தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு தியேட்டர்களைத் திறக்கவில்லை. இதனிடையே, ஆந்திராவில் ஜுலை 8 முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 5 மணி வரையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தெலுங்குத் திரையுலகினல் தியேட்டர்களைத் திறப்பது பற்றி விவாதிக்க உள்ளனர். ஆந்திராவில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணங்கள் குறித்த பிரச்சினையும், தெலங்கானாவில் தியேட்டர்களுக்கான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளன. இது பற்றியெல்லாம் பேசி முடித்த பிறகுதான் தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்வார்களாம்.