ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சகுந்தலம்' போன்ற படங்கள் உள்ளன.
பேமிலி மேன் வெப் தொடர் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடியிலும் தடம் பதித்து வெற்றி பெற்றுள்ளார். ஊரடங்கு என்பதால் சமந்தா குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றார். சமந்தா அடிக்கடி போட்டோஷூட் எடுத்து படங்களை பகிர்வார். கவர்ச்சி படங்களால் பரபரப்பையும் ஏற்படுத்துவார். தற்போது வெள்ளை நிற உடையில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில் சமந்தா அன்னப்பறவை போல் இருக்கிறார். இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சமந்தா "வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த எல்லாவற்றையும் பற்றி யோசித்துப் பாருங்கள். முதலில் இதை நம்மால் இதை செய்யமுடியாது என்று தோன்றியது... ஆனால் தற்போது நீங்கள் அடைந்த உயரத்தைப் பாருங்கள்... நாம் போராளிகள்!" என்றும் தெரிவித்துள்ளார்.