தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் ‛தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் நடித்தார். இந்த தொடருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அதேசமயம் பிறமொழிகளில் சமந்தாவின் நடிப்பை பாராட்டினர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் தான் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து வேதனை அடைந்துள்ளார் சமந்தா.
இதுப்பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்கள், சீண்டல்களை எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. யாரோ ஒருவர் சொல்கிறார் என கடந்து செல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போது மனம் மிகவும் வலிக்கிறது. சினிமாவில் பல ஆண்டுகளாக இருப்பதால் இதை கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கையாலேயே இவற்றையெல்லாம் சமாளித்து வருகிறேன் என்கிறார் சமந்தா.