தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் |
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள விமான நிலையம் பற்றி 'ஆர்ஆர்ஆர்' இயக்குனர் ஒரு வருத்தமான பதிவை காலையிலேயே பதிவிட்டுள்ளார்.
“லுப்தான்சா விமானம் மூலம் அதிகாலை 1 மணிக்கு வந்திறங்கினோம். ஆர்டிபிசிர் சோதனைக்கான படிவத்தை நிரப்பச் சொன்னார்கள். அனைத்து பயணிகளும் தரையில் உட்கார்ந்தும், சுவற்றில் வைத்தும் அந்தப் படிவங்களை நிரப்பினார்கள். அதைப் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை. மேஜைகளை வைப்பது ஒரு சாதாரண சேவை. வெளியேறும் கேட்டுக்கு வெளியே பல தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா மீதான முதல் பார்வை எப்படி இருக்கும்?. தயவு செய்து இதைக் கவனியுங்கள்,” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவிற்கு தொடர்ந்து பல லைக்குகளும், ரிடிவீட்டுகளும் கிடைத்து வருகின்றன.