'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள விமான நிலையம் பற்றி 'ஆர்ஆர்ஆர்' இயக்குனர் ஒரு வருத்தமான பதிவை காலையிலேயே பதிவிட்டுள்ளார்.
“லுப்தான்சா விமானம் மூலம் அதிகாலை 1 மணிக்கு வந்திறங்கினோம். ஆர்டிபிசிர் சோதனைக்கான படிவத்தை நிரப்பச் சொன்னார்கள். அனைத்து பயணிகளும் தரையில் உட்கார்ந்தும், சுவற்றில் வைத்தும் அந்தப் படிவங்களை நிரப்பினார்கள். அதைப் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை. மேஜைகளை வைப்பது ஒரு சாதாரண சேவை. வெளியேறும் கேட்டுக்கு வெளியே பல தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா மீதான முதல் பார்வை எப்படி இருக்கும்?. தயவு செய்து இதைக் கவனியுங்கள்,” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவிற்கு தொடர்ந்து பல லைக்குகளும், ரிடிவீட்டுகளும் கிடைத்து வருகின்றன.