ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை மந்திரா பேடி. சினிமா, டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
தமிழில் சிம்பு நடித்த “மன்மதன் படத்திலும், சாஹோ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கௌஷல் என்பவரை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மந்திரா. அவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த வருடம் தான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று(ஜூன் 30) அதிகாலை ராஜ் கௌஷல் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். அன்று தான் தன் மனைவி, குழந்தைகளுடன் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அடுத்த சில தினங்களுக்குள் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் கௌஷல் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். “அந்தோணி கோன் ஹை, ஷாதி கா லாடூ, பியார் மெயின் கபி கபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கணவரின் உடலை அவரே சுமந்து சென்றதோடு, இறுதிச்சடங்கின் போது வைக்கப்படும் கொள்ளி என சொல்லப்படும் அந்த சட்டியை கையில் ஏந்தி கண் கலங்கியபடி சென்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் நெஞ்சையும் உருக்கியது.