இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடிதான்', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், குழந்தையை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். அதற்கு ‛‛குழந்தை பெற்றுக் கொள்வது உங்களின் பார்ட்னர் மற்றும் உங்களுடைய முடிவுகளை பொறுத்தது'' என்று பதில் அளித்தார் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்க அவரும் அப்படியே செய்தார். அதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் செல்பியை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அந்த படம் வைரலாகி வருகிறது.