‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் சீனியர் ஹீரோவான அர்ஜுன். இவருக்கு சொந்தமாக சென்னை, கெருகம்பாக்கத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் ஒரு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயிலை கடந்த சில வருடங்களாக கட்டி வருகிறார். மிகப் பெரும் ஆஞ்சநேயர் சிலை ஒன்றை அங்கு நிறுவியுள்ளார்.
அக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜுலை, 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அர்ஜுன். தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய ரசிகர்களுக்காக மூன்று மொழிகளிலும் அந்த அறிவிப்பில் பேசியுள்ளார்.
“என்னுடைய நீண்ட கால கனவுன்னு சொல்லலாம். தமிழகத்துல நாங்க கட்டியிருக்கிற ஆஞ்சநேயர் கோயில் வேலைகள் இப்படி முடிஞ்சிருக்கு. இந்த கோயிலோட கும்பாபிஷேகம் ஜுலை 1, 2 செய்யறதா முடிவு பண்ணியிருக்கோம். நிறைய பேரைக் கூப்பிட்டு இந்த பங்ஷனை ரொம்ப கிரான்டா பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, இன்னைக்கு இருக்கிற நிலைமை கொரானோ, யாரையும் கூப்பிட முடியாத ஒரு சூழ்நிலை. இருந்தாலும் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் நீங்கலாம் இந்த பங்ஷனை மிஸ் பண்ணக் கூடாதுன்னு யு டியூப்ல லைவ் ஸ்ட்ரீம் அரேஞ்ச் பண்ணியிருக்கோம்,” என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இது சம்பந்தமாக அர்ஜுன் சந்தித்து அவருக்கு அழைப்பு விடுத்திருப்பார் எனத் தெரிகிறது.