‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பீஹாரில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன் படம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2019ல் தகுதி தேர்வு நடந்தது. அதற்கான முடிவுகள் கடந்த ஆண்டு மார்ச்சில் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்னைகளால், மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அவை சரி செய்யப்பட்டதாக அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் அடங்கிய, முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இணையதளத்தில் அந்த மாணவரின் பதிவு எண், மதிப்பெண் என, அனைத்து விவரங்களும் சரியாக உள்ளன. ஆனால், ரிஷிகேஷின் படத்துக்கு பதிலாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ள. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
பீஹாரில் எந்த நியமனமும் மோசடியில்லாமல் நிரப்பப்படுவதில்லை, என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2016இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கில் நடிப்பவர், தமிழில் கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.