ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், இன்னும் சிலருக்கு வெளியில் செல்ல பயமாகத்தான் இருக்கிறது. ஒரு சில சினிமா பிரபலங்கள்தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்கள், சிலர் தயாராகி வருகிறார்கள்.
நடிகை ஆண்ட்ரியா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் கொரானோவிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என சிறப்பான பத்து ஆலோசனைகளையும் சொன்னார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து அவருக்கும் போரடித்துவிட்டது போலிருக்கிறது. நேற்று அசத்தலான காஸ்ட்யூம் ஒன்றை அணிந்து சில புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு, “டிரஸ் பண்ணியாச்சி, ஆனா, எங்க போறது,” எனக் கேட்டிருந்தார்.
ஜுலை மாதத்திலிருந்து தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் உள்ளது. அதுவரையிலும் ஆண்ட்ரியா வீட்டில் தான் அடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஐதராபாத்தில் அவருடைய படத்தின் படப்பிடிப்பை இப்போதே ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும்.
தற்போது தமிழில், “அரண்மனை 3, நோட் என்ட்ரி, வட்டம், மாளிகை, பிசாசு 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.