பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, 2013ல் வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது அறிமுகப்படத்திற்கும், அடுத்து இயக்கிய இரண்டாவது படமான விஜய் நடித்த 'தெறி' படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தான் இசையமைக்க வைத்தார். இரண்டு படங்களிலுமே பாடல்கள் ஹிட்டாகவே அமைந்தன.
ஆனால், அடுத்து விஜய்யை வைத்து இயக்கிய 'மெர்சல், பிகில்' இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ. இந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் தாறுமாறாக ஹிட்டாகின. இப்போது வரையிலும் ரசிகர்கள் அப்பாடல்களை ரசித்து வருகிறார்கள்.
'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்', 'பிகில்' படத்தில் இடம் பெற்ற 'சிங்கப்பெண்ணே' இரண்டு பாடல்களுமே எவர்கிரீன் பாடல்களாக மாறின.
அட்லீ, அடுத்து ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையாம். மேலும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, எடிட்டராக ரூபன் என 'மெர்சல், பிகில்' கூட்டணியையே ஹிந்திப் படத்திற்கும் தொடர உள்ளார் என்கிறார்கள்.
கொரோனா சிக்கல் முழுவதமாக தளர்ந்த பிறகு அட்லீ - ஷாரூக்கான் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.