இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, 2013ல் வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது அறிமுகப்படத்திற்கும், அடுத்து இயக்கிய இரண்டாவது படமான விஜய் நடித்த 'தெறி' படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தான் இசையமைக்க வைத்தார். இரண்டு படங்களிலுமே பாடல்கள் ஹிட்டாகவே அமைந்தன.
ஆனால், அடுத்து விஜய்யை வைத்து இயக்கிய 'மெர்சல், பிகில்' இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ. இந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் தாறுமாறாக ஹிட்டாகின. இப்போது வரையிலும் ரசிகர்கள் அப்பாடல்களை ரசித்து வருகிறார்கள்.
'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்', 'பிகில்' படத்தில் இடம் பெற்ற 'சிங்கப்பெண்ணே' இரண்டு பாடல்களுமே எவர்கிரீன் பாடல்களாக மாறின.
அட்லீ, அடுத்து ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையாம். மேலும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, எடிட்டராக ரூபன் என 'மெர்சல், பிகில்' கூட்டணியையே ஹிந்திப் படத்திற்கும் தொடர உள்ளார் என்கிறார்கள்.
கொரோனா சிக்கல் முழுவதமாக தளர்ந்த பிறகு அட்லீ - ஷாரூக்கான் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.