பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, 2013ல் வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது அறிமுகப்படத்திற்கும், அடுத்து இயக்கிய இரண்டாவது படமான விஜய் நடித்த 'தெறி' படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தான் இசையமைக்க வைத்தார். இரண்டு படங்களிலுமே பாடல்கள் ஹிட்டாகவே அமைந்தன.
ஆனால், அடுத்து விஜய்யை வைத்து இயக்கிய 'மெர்சல், பிகில்' இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ. இந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் தாறுமாறாக ஹிட்டாகின. இப்போது வரையிலும் ரசிகர்கள் அப்பாடல்களை ரசித்து வருகிறார்கள்.
'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்', 'பிகில்' படத்தில் இடம் பெற்ற 'சிங்கப்பெண்ணே' இரண்டு பாடல்களுமே எவர்கிரீன் பாடல்களாக மாறின.
அட்லீ, அடுத்து ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையாம். மேலும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, எடிட்டராக ரூபன் என 'மெர்சல், பிகில்' கூட்டணியையே ஹிந்திப் படத்திற்கும் தொடர உள்ளார் என்கிறார்கள்.
கொரோனா சிக்கல் முழுவதமாக தளர்ந்த பிறகு அட்லீ - ஷாரூக்கான் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.