எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரான விஜய் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு தன்னுடைய 65வது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. கொரானோ இரண்டாவது அலை பரவத் தொடங்கியதும் படக்குழு சென்னை திரும்பியது.
பொதுவாக விஜய் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் போதுதான் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஆனால், விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு பேட்டி ஒன்றிலும் வம்சி அது பற்றிய தகவலை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த அணுகுமுறை விஜய்க்குப் பிடிக்காதே என அப்போதே கோலிவுட்டில் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அதற்கேற்றபடி சில காரணங்களைச் சொல்லி அப்படத்தில் நடிப்பதைத் தவிர்த்து விடலாமா என விஜய் யோசிப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இங்கேயே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் போது, தெலுங்குத் தயாரிப்பாளரின் படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என்ற சலசலப்பும் இங்கு எழுந்துள்ளது.
எனவே, தெலுங்கு தயாரிப்பாளரின் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் விஜய் நடிப்பது மறுபரிசீலனை செய்யப்படும் என்றே தெரிகிறது.