சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் |
காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். இப்படியான நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக என்ன செய்வார்கள் என்று என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மனநிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
அதேபோல் இதே பிரச்சினையை மையமாக வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட பிரியங்கா நடிப்பில் மிக மிக அவசரம் என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருந்தார். அதில் சாலை பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் போலீசாரை சாலையோர பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் என்பது பொழுபோக்கு மட்டுமல்ல, அதைத்தாண்டி இந்த சமூகத்தில் எத்தகையை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் மிக மிக அவசரம் படத்தை இயக்கியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ்காமாட்சி.