சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். இப்படியான நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக என்ன செய்வார்கள் என்று என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மனநிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
அதேபோல் இதே பிரச்சினையை மையமாக வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட பிரியங்கா நடிப்பில் மிக மிக அவசரம் என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருந்தார். அதில் சாலை பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் போலீசாரை சாலையோர பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் என்பது பொழுபோக்கு மட்டுமல்ல, அதைத்தாண்டி இந்த சமூகத்தில் எத்தகையை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் மிக மிக அவசரம் படத்தை இயக்கியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ்காமாட்சி.