வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் 2018ல் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராஷி கண்ணா.
அதன்பின் 'அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'அரண்மனை 3, துக்ளக் தர்பார்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, கார்த்தி நடிக்கும் 'சர்தார்', படத்திலும், சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்திலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
டில்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா 2013ம் ஆண்டு வெளிவந்த 'மெட்ராஸ் கபே' என்ற ஹிந்திப் படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். பின் தெலுங்கில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ராஷி கண்ணாவின் சம்பளம் ஒரு கோடி ரூபாயாம். இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோயின்களின் கிளப்பில் இணைந்துள்ளார் ராஷி கண்ணா.
தமிழில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் தான் ஒரு கோடிக்கும் அதிகமாக தற்போது சம்பளம் பெறும் நடிகைகள்.