விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தமிழில் 2018ல் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராஷி கண்ணா.
அதன்பின் 'அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'அரண்மனை 3, துக்ளக் தர்பார்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, கார்த்தி நடிக்கும் 'சர்தார்', படத்திலும், சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்திலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
டில்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா 2013ம் ஆண்டு வெளிவந்த 'மெட்ராஸ் கபே' என்ற ஹிந்திப் படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். பின் தெலுங்கில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ராஷி கண்ணாவின் சம்பளம் ஒரு கோடி ரூபாயாம். இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோயின்களின் கிளப்பில் இணைந்துள்ளார் ராஷி கண்ணா.
தமிழில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் தான் ஒரு கோடிக்கும் அதிகமாக தற்போது சம்பளம் பெறும் நடிகைகள்.