சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
இயக்குனர் சசி இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து படத்தில் பரத் ஜோடியாக நடித்தவர் எரிக்கா பெர்ணான்டஸ். அதற்பிறகு விரட்டு, விழித்திரு படங்களில் நடித்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் பாலிவுட் பக்கம் போனவர் இப்போது அங்கு முன்னணி சின்னத்திரை நடிகை ஆகிவிட்டார்.
குச் ரங் பியார் கே ஐஸே பி என்ற தொடரின் 2 சீசன்களிலும் டாக்டர் சோனாக்ஷி போஸ் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். தற்போது இதன் 3வது சீசனில் நடித்து வருகிறார். இடையில் கவுஸ்தி சிந்தகி கே என்ற தொடரிலும் நடித்தார். எரிக்கா பெர்ணான்டசுக்கு சில வெப் சீரிசில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் கேட்டதாகவும், அதனால் தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: வெப் தொடர்களில் சரியான கதைகளே இல்லாமல் வெறும் காசு சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். எந்தவொரு காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதில்களே இல்லை .
போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத காட்சிகளை கமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கதைக்கு முக்கியமாக இருந்தால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. ஆனால் வலிந்து திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால் அதற்கு நான் உடன்பட மாட்டேன். அதனால்தான் தேடிவந்த வாய்ப்புகளை நிராகரித்தேன். சின்னத்திரை தொடர்களில் நடிப்பதே எனக்கு நிறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. என்கிறர் எரிக்கா.