துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! |
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவியது. தற்போது அதன் தாக்கம் சிறிது குறைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சிலர் வேறு வழிகளில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான யஷ், சுமார் 3 ஆயிரம் திரைப்பட தொழிலளார்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதி வழங்குகிறார். இது தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இது தொடர்பாக யஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கோவிட் தோற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்தச் செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன்.
இந்தச் சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை.
இவ்வாறு யஷ் தெரிவித்துள்ளார்.