போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கொரோன 2வது அலை தொற்று காலத்தில் முதல் அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதுதவிர பெப்சி தொழிலாளர்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் நிதி வழங்கினார்.
தற்போது தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் இப்போது கொரோனா 2வது அலையில் இருக்கிறோம். முதல் அலையை விட, இரண்டாவது அலையில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக ஆஸ்துமா, இதயப் பிரச்சினை இருப்பவர்களை ரொம்பவே பாதித்துள்ளது.
தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். முக்கியமான விஷயத்துக்காக வெளியே சென்றால் கூட இரட்டை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
![]() |
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.