மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, தனது தந்தையின் பிறந்தாநாளான மே-31 அன்று வழக்கமாக தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை, போஸ்டர், டீசர் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் அப்படி எந்த தகவலும் அவர் படம் குறித்து வெளியாகவில்லை. அதேசமயம் அவரது தந்தை கிருஷ்ணா, ஒரு பேட்டியில் மகேஷ்பாபு தனது கோரிக்கை ஒன்றை நிராகரித்தது குறித்து பகிர்ந்துகொண்ட புதிய தகவல் வெளியானது.
அதாவது கடந்த 70 வருடங்களுக்கு முன் என்.டி.ராமாராவ் மற்றும் ரங்காராவ் இருவரும் இணைந்து நடித்த பாதாள பைரவி என்கிற மாயாஜால படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப்படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்ற மாதிரி இந்தியில் ரீமேக் செய்து அதில் மகேஷ்பாபு நடிக்க வேண்டும் என அவரிடம் கூறினாராம் தந்தை கிருஷ்ணா.
ஆனால் மகேஷ்பாபுவோ தந்தையின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டாராம். ரொம்ப பழைய படம், இந்த காலத்தில் ரீமேக் செய்யும்போது, அதுவும் தனக்கு செட்டாகுமா என்கிற காரணத்தினால் அவர் மறுக்கவில்லை.. பொதுவாகவே ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதையும் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் நடிப்பதில்லை என்பதையும் மகேஷ்பாபு கொள்கையாவே வைத்திருப்பதுதான், தனது தந்தையின் கோரிக்கையை நிராகரிக்க காரணமாம்.




