மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் | கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் தப்பிய விஜய் தேவரகொண்டா | லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. அவ்வப்போது நல்ல பதிவுகளை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அதன்பின் கொரோனாவை சமாளிக்க சில நல்ல ஆலோசனைகளைச் சொன்னார்.
இன்றும் ஒரு நல்ல ஆலோசனையைச் சொல்லியிருக்கிறார். “இன்றைய பதிவு புத்தகங்கள், புத்தகங்கள், மேலும் புத்தகங்கள் பற்றியது. நான் சிறுமியாக இருந்த போது புத்தகங்களுக்கு இடையில்தான் எனது மூக்கு புதைந்திருக்கும். எனது பெற்றோர்கள் எப்போதாவது ஒரு முறைதான் சினிமாவுக்கு கூட்டிச் செல்வார்கள். எனவே, புத்தகங்களை வாசிப்பது என்பதுதான் உலகத்திற்கு அப்பால் இருப்பதைக் கண்டுபிடிக்கும் வழியாக இருந்தது,” என அவர் வாசித்த சில புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் மொழிமாற்றத்தை இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். அதை வல்லமை மிக்க 'பொன்னியின் செல்வன்' புத்தகத்திலிருந்து ஆரம்பித்துள்ளேன்.
இங்குள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஐ-பாட்களை மாற்றிவிட்டு கதைப் புத்தகங்களைக் கொடுங்கள். ஒரு குழந்தையின் கற்பனை வளத்தை புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் பண்படுத்த முடியாது. புத்தகங்களைத் தேர்வு செய்வதும், படிப்பதும் ஒரு போதும் தாமதமாகாது.
அடுத்தவர்களின் வாழ்க்கையில் நுழைந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதை விட அதற்குப் பதிலாக புத்தகங்களுக்குள் நம் மூக்கை நுழைத்துக் கொள்வது இந்த உலகத்தையும் சிறப்பாக்கும்,” என்று குறிப்பிட்டுளளார்.