தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்துள்ள மெஹ்ரீன், தற்போது தெலுங்கில் எப்-3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அரசியல் பிரமுகர் பவ்யா பிஷ்னாயுடன் மெஹ்ரீனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து வரைவில் திருமண தேதி அறிவிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு எப்-3 படத்தில் நடித்து முடித்ததும் புதிய படங்களில் கமிட்டாக மாட்டேன் என்று கூறி வந்தார் மெஹ்ரீன் பிரஜடா. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அவரது திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் சினிமாவில் நடிப்பை தொடரப் போவதாக அறிவித்துள்ள மெஹ்ரீன், இனிமேல் நடிக்கப்போவதில்லை என்று சொல்லி தான் திருப்பி அனுப்பிய பட நிறுவனங்களிடம் மீண்டும் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம்.