மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா |
நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்துள்ள மெஹ்ரீன், தற்போது தெலுங்கில் எப்-3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அரசியல் பிரமுகர் பவ்யா பிஷ்னாயுடன் மெஹ்ரீனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து வரைவில் திருமண தேதி அறிவிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு எப்-3 படத்தில் நடித்து முடித்ததும் புதிய படங்களில் கமிட்டாக மாட்டேன் என்று கூறி வந்தார் மெஹ்ரீன் பிரஜடா. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அவரது திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் சினிமாவில் நடிப்பை தொடரப் போவதாக அறிவித்துள்ள மெஹ்ரீன், இனிமேல் நடிக்கப்போவதில்லை என்று சொல்லி தான் திருப்பி அனுப்பிய பட நிறுவனங்களிடம் மீண்டும் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம்.