நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கணிக்க முடியாத இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா தொற்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சவாலாக உள்ளது. இது போன்ற ஒரு விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை. அதனால் இதனை நம்மால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை நம்மில் பலர் சந்திக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது. இது மீண்டும் மீண்டும் நடக்கிறது என்ற உண்மையை ஜீரணிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. இதுபோன்ற நேரங்களில் நாம் நேர்மறையாகவும், நேர்மறையான மனதுடனும் இருப்பது நல்லது.
நம் சாதாரண ஹீரோக்கள் (முன்கள பணியாளர்கள்) சில அசாதாரணமான விஷயங்களைச் செய்கிறார்கள், இது எனக்கு நம்பிக்கையைத் தந்தது மற்றும் என் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியுள்ளது. இது உங்கள் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வருவதற்கும், ஒரு சிறிய நம்பிக்கையைத் தருவதற்கும், உழைக்கும் இந்த ஹீரோக்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறேன். உங்களுக்கு நிறைய அன்பு. உங்களுக்கு நிறைய பலம். நன்றாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.