சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழகத்தை போல கேரளாவிலும் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியே மீண்டும் வென்று, பினராயி விஜயனே மீண்டும் முதல்வராக தொடர்கிறார். இதற்கான பதவியேற்பு விழா வரும் வியாழன் (மே-20) அன்று மாலை 5 மணி அளவில் திருவனந்தபுரத்தில் கவர்னர் முன்னலையில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதுவும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பதவியேற்பு விழா அறிவிப்பு பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே தனது மனதில் தோன்றியதை பளிச்சென கூறிவிடும் நடிகை பார்வதி, இந்த பதவியேற்பு விழா அறிவிப்பு வெளியானதும், இந்த விழாவை காணொளி காட்சி வாயிலாக நடத்துமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது : “கேரளாவில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதுடன் கள பணியாளர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டியும் வருகிறீர்கள். இதுபோன்ற சமயத்தில் கிட்டத்தட்ட 500 பேர் கூடும் விதமான பதவியேற்பு விழாவை நடத்துவதன் மூலம், மீண்டும் நோய் தொற்று அதிமாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இறுதிக்கட்ட அபாயத்தில் இருக்கிறோம். இந்தசமயத்தில் அதனால் இந்த விழாவை நேரடியாக நடத்துவது தவறான நடவடிக்கையாகவே அமையும்.. அதை தவிர்த்து, காணொளி காட்சி வாயிலாக நடத்தினால் இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்” என விமர்சனத்துடன் கூடிய வேண்டுகோளை வைத்துள்ளார். பார்வதி.