Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மரணத்தில் இருந்து மீண்டது எப்படி?: வசந்த பாலனின் உருக்கமான பதிவு

19 மே, 2021 - 15:11 IST
எழுத்தின் அளவு:
Vasanthabalan-explaint-how-he-recovered-from-crona

வெயில், அங்காடி தெரு, அரவாண், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அதன் பிறகு நுரையீரலும் பாதிக்கப்பட்டு, மரணத்தின் அருகில் சென்று விட்டு திரும்பி இருக்கிறார். நண்பர்களால் தான் உயிர்மீண்ட கதையை தனது முகநூல் பக்கத்தில் அவர் உருக்கமாக எழுதியிருக்கிறார். அது வருமாறு:

மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்குருவியாய் இல்லம் திரும்பினேன். ஒரு மாத பூர்ண ஓய்வுக்கு பிறகு மெல்ல என் பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அபாயக் கட்டத்தைக் கடக்க நட்பின் கரங்களால் பேருதவி செய்த சில உயர்ந்த உள்ளங்களை நினைவு கூறாமல் என் கடமை தீராது

கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் தினத்தில் இருந்து எனக்கான மருத்துவ ஆலோசனைகளை சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வழங்கிய வண்ணம் இருந்தார். ஆனால் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிறைந்து வழிந்ததால் நானே முடிவெடுத்து வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டதில் காய்ச்சல் குறையவில்லை.

சகல வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தினார். ஆனால் என் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் இல்லம் அருகே உள்ள சின்ன மருத்துவமனையில் சேர்ந்தேன்.

ஆனால் அங்கு சேர்ந்த பிறகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் என் உடல்நிலை மோசமான சூழ்நிலையை எட்டியபடியிருந்தது. தயாரிப்பாளர்கள் சதீஷ்குமாரும், டி.சிவாவும் எனை பெரிய மருத்துவமனைக்கு மாறிவிடும்படி எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

அன்றிரவு எனக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் என் நுரையீரல் மருத்துவமனையில் சேர்ந்த போது ஏற்பட்ட பாதிப்பை விட மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாகவும் காட்டியது. நண்பர்கள், நலம் விரும்பிகள் என்னை அப்பல்லோவில் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள். "அப்போலாலாம் நமக்கு சரியா வருமா. நாமளலாம் மிடில்கிளாஸ் என்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என்று என்று கெஞ்சினேன்.

வலுக்கட்டாயமாக அங்கு சேர்த்தார்கள். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர் ஒரு உயிர்காக்கும் மருந்தின் பெயரை உச்சரித்து இந்த மருந்து அது எங்கள் மருத்துவமனையில் இப்போது ஸ்டாக் இல்லை எங்கிருந்தாவது 24 மணிநேரத்திற்குள் தருவியுங்கள். ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்று அறிவுறுத்தினார்.

எனது நண்பர்கள், நலம் விரும்பிகள், அதிகாரிகள், டாக்டர்களின் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மருந்து கிடைத்தது. அந்த மருந்து என் ரத்த நாளங்களில் ஏற்றப்பட்ட 48 மணி நேரம் கழித்து நான் அபாயக் கட்டத்தைக் கடந்தேன். நான் இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் என் நண்பன் வரதன், டாக்டர் கு.சிவராமன்.

இவ்வாறு வசந்தபாலன் எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கூட்டம் வேண்டாம் : முதல்வருக்கு பார்வதி வேண்டுகோள்கூட்டம் வேண்டாம் : முதல்வருக்கு ... தமிழில் வாய்ப்பு தேடும் மாடல் அழகி தமிழில் வாய்ப்பு தேடும் மாடல் அழகி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

karutthu - nainital,இந்தியா
20 மே, 2021 - 13:10 Report Abuse
karutthu நமக்கு ஏற்பட்டால் அதோகதி தான்
Rate this:
karutthu - nainital,இந்தியா
20 மே, 2021 - 13:09 Report Abuse
karutthu இதுவரை நீங்கள் இந்த உயிர் காத்த மருந்தின் பெயரை சொல்லவே இல்லையே ....மிஸ்டர் வசந்த பாலன் ....தெரிந்தால் மற்றவர்களும் சுதாரித்து கொள்வார்களே
Rate this:
Jay - SFO,யூ.எஸ்.ஏ
19 மே, 2021 - 16:05 Report Abuse
Jay இவ்வளவு பெரிய ஆளுக்கு இங்கு மருத்துவ வசதி இப்படி பல்லை இளிக்குது. நம் கதி?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in