மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்கள் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் என்கிற படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து, ஆறு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், தற்போது தான் பஹத் பாசில், நயன்தாரா நடிப்பில் பாட்டு என்கிற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். கொரோனா காலகட்டம் என்பதால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருந்த அல்போன்ஸ் புத்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஏற்ற, கதை ஒன்றை தான் ஏற்கனவே உருவாக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
பிரேமம் படம் வெற்றியடைந்த சமயத்திலிருந்து, ரஜினிகாந்தை தான் சந்திப்பதற்கு முயற்சித்து வருவதாகவும், ஆனால் இன்றைய நாள் வரை அதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்றும் கூறியுள்ள அல்போன்ஸ் புத்திரன், நிச்சயம் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு மட்டும் நிகழ்ந்து விட்டால், அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்று விடுவேன் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களின் டைரக்சனில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், அல்போன்ஸ் புத்ரனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.