ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் நடித்து வெளிவந்த 'கர்ணன்' படத்தில் படம் முழுவதும் தனுஷுடனேயே இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் லால்.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த லாலுக்கு 'கர்ணன்' படத்தின் எமராஜா கதாபாத்திரம் ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது. படத்தில் அவர் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இளைஞனான தனுஷுடன் எப்போதும் கூடவே இருக்கும் ஒரு நண்பன் போல நடித்திருந்தார். படத்தில் அவர் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை எனப் பலர் கேட்டதற்கு, பேஸ்புக் பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.
“கர்ணன்' படத்தில் எமராஜா கதாபாத்திரத்தில் நான் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை என உங்களில் பலர் கேட்டிருந்தீர்கள். 'கர்ணன்' படம் திருநெல்வேலி பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு படம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சென்னையில் பேசப்படும் தமிழில் இருந்து மிகவும் வித்தியாசமாகப் பேசப்படும் வழக்கு உடையது திருநெல்வேலி தமிழ்.
மலையாளத்தில் கூட திருச்சூர் வழக்கில் மலையாளத்தைப் பேசச் சொன்னால், யாராலும் அதை அந்த அளவு சரியாகப் பேச முடியாது. கர்ணன் படம் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் மொழியின் தனித்தன்மையான உச்சரிப்புடன் மொத்த கதாபாத்திரத்தையும் பேச வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம்.
அதில் நடித்த பலர் உள்ளூர் மக்கள், எனது டப்பிங் படத்தில் தனியாகத் தெரிய கிடைத்த நல்ல வாய்ப்பாகவும் இருந்தது. எனது 100 சதவீதப் பங்களிப்பில் இருந்து சிறிதும் குறையக் கூடாது என நினைத்தேன், அதனால், அது பற்றிய சந்தேகம் எனக்கு இருந்தது.
இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோரது பிடிவாதத்தால் டப்பிங் பேசுவதற்காக சென்னை சென்றேன். இருப்பினும் படத்திற்கு நல்லது கருதியும், எனது வேண்டுகோளை ஏற்றும் ஒரு திருநெல்வேலிக்காரரின் குரல் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், நல்ல வார்த்தைகளுக்கும் நன்றி,” என லால் குறிப்பிட்டுள்ளார்.