நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில், முதன்முதலாக நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண், தனது தந்தை சிரஞ்சீவிக்காக கைப்பற்றினார். ஆரம்பத்தில் சாஹோ பட இயக்குனர் சுஜீத் தான், இதன் ரீமேக்கை இயக்குவதாக சொல்லப்பட்டது. அதன்பின் இயக்குனர் வி.வி.விநாயக் பெயர் அடிபட்டது. ஆனால் இவர்கள் லூசிபர் படத்தின் கதையை தெலுங்கிற்கு ஏற்றமாதிரி மாற்றி, சிரஞ்சீவியை கவர தவறிவிட்டார்கள்.
அதன்பின்னர் தான் ரீமேக் படங்களை அந்தந்த மொழிக்கு ஏற்ப பக்காவாக இயக்குபவர் என பெயரெடுத்த இயக்குனர் மோகன் ராஜா, லூசிபர் ரீமேக்கை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவரும் இந்தப்படத்தில் நீடிப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் லூசிபர் படத்தை தெலுங்கிற்கு ஏற்றபடி, மாற்றும்படி சிரஞ்சீவி கூறியதை, மோகன்ராஜாவால் அவரது திருப்திக்கு ஏற்ப மாற்ற முடியவில்லையாம். அப்படி அவர் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்காததால், படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வருகிறாராம் சிரஞ்சீவி.