இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
கொரோன 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதோடு, திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரையுலக பிரமுகர்களை அழைத்து ஆலோசனை செய்தார். இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்துவது, பெப்சி தொழிலாளர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டது. இது முதல்வரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.