ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
கொரோனாவின் 2வது அலைக்கு திரைப்படத்துறையினர் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள். நேற்று இயக்குனர் தயாளன் சேவியரும், தயாரிப்பாளர் அந்தோணியும் பலியானார்கள். தயாளன் சேவியர், முரளி, விந்தியா, தேவயானி நடித்த கண்ணுக்கு கண்ணாக என்ற படத்தை இயக்கினார். பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்தார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 56.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் அந்தோணி. சுசீந்திரன் இயக்கத்தில் விதார்த்த நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தை தயாரித்தார். 52 வயதான அந்தோணி நேற்று தூத்துக்குடியில் உள்ள பெற்றோரை பார்க்க சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு கொரோன தொற்று இருந்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.