ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருக்கிறது. தியேட்டர்களை கடந்த மாதத்திலிருந்தே மூடிவிட்டனர். இந்நிலையில் கடந்த மாதக் கடைசியிலும் இந்த மாதத்திலும் வெளியாக இருந்த படங்களின் நிலைமை தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனால் பல படங்கள் மீண்டும் ஓடிடி நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளன.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஆகிய படங்களையும் ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனாலும், அவற்றை அப்படி வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறதாம். இப்படங்களுக்கான சாட்டிலைட் உரிமைகளை விற்கும் போது, தியேட்டரில் வெளியிட்ட பிறகு படத்தை டிவியில் ஒளிபரப்பு செய்வதற்காகத்தான் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.
தற்போது ஓடிடி வெளியீடு என்பதால் அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமாம். அதனால் தான் இந்தப் படங்களுக்கான ஓடிடி பற்றிய தகவல்கள் வந்தும் அவைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்தப் பெரிய படங்களைப் போலவே மேலும் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள். ஆனால் அவையும் இதுபோன்று சிக்கலில் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் தியேட்டர்களைத் திறக்க இன்னும் இரண்டு, மூன்று மாத காலம் ஆகும் என்கிறார்கள். அதனால், அதற்குள்ளாக பத்து, பதினைந்திற்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.