ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டில் புதிய அரசு இன்னும் இரண்டு நாட்களில் பதவியேற்க உள்ளது. அதற்குள்ளாக பல்வேறு துறையினரும் அவர்களது துறைக்காக பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் நீண்ட நாட்களாகவே பல கோரிக்கைகளை அரசுக்கு வைத்து வருகின்றனர். அதிலும் கடந்த ஓராண்டு காலமாக கொரானோ தொற்றால் சினிமா தியேட்டர்கள் பல மாதங்களாக மூடியே இருந்தன. சில மாதங்கள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கைளை வைத்துள்ளார்கள். அது பற்றி பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “கொரானோ பிரச்சினையால் பல மாநிலங்களில், சொத்து வரி, தொழில் வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்துள்ளார்கள். அது போல தமிழ்நாட்டிலும் செய்தால் நன்றியுடையவர்களாக இருப்போம். மேலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 8 சதவீத உள்ளாட்சி வரி இருக்கிறது, அதையும் நீக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு பதவியில் இருந்த அரசு தியேட்டர்காரர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளார்கள்.
ஒரே நேரத்தில் தியேட்டர்காரர்களின் இத்தனை கோரிக்கைகளையும் புதிய அரசு நிறைவேற்றுமா என்பது விரைவில் தெரிய வரும்.