சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக மலையாளத்தில் 'பட்டம் போலே' என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். தான் சினிமாவில் அறிமுகமாவதற்கு மம்முட்டியே காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.
இவரது தந்தை கே.யு.மோகனன் பிரபலமான ஒளிப்பதிவாளர் என்றாலும் மாளவிகாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லையாம். ஒருமுறை விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் மாளவிகாவை பார்த்தாராம் மம்முட்டி. அப்போது அவரது மகன் துல்கர் சல்மான் நடிக்கும் 'பட்டம் போலே' படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தார்களாம்.,
“மாளவிகா அந்த கதாபாத்திரத்துக்கு மிகச்சரியாக இருப்பார் என அவர்களிடம் சிபாரிசு செய்து என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தது மம்முட்டி தான். அத்தனை பெரிய மனிதர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது” என கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.