சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக மலையாளத்தில் 'பட்டம் போலே' என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். தான் சினிமாவில் அறிமுகமாவதற்கு மம்முட்டியே காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.
இவரது தந்தை கே.யு.மோகனன் பிரபலமான ஒளிப்பதிவாளர் என்றாலும் மாளவிகாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லையாம். ஒருமுறை விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் மாளவிகாவை பார்த்தாராம் மம்முட்டி. அப்போது அவரது மகன் துல்கர் சல்மான் நடிக்கும் 'பட்டம் போலே' படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தார்களாம்.,
“மாளவிகா அந்த கதாபாத்திரத்துக்கு மிகச்சரியாக இருப்பார் என அவர்களிடம் சிபாரிசு செய்து என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தது மம்முட்டி தான். அத்தனை பெரிய மனிதர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது” என கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.