'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

ராஜமவுலியின் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்டத் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படத்தை அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் இப்படத்தின் பாதிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள்.
அதனால், படத்தை அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி வெளியிட வாய்ப்பில்லை. எனவே, படத்தை அடுத்த வருட கோடை விடுமுறையில் தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம்.
'பாகுபலி 2' படம் கூட ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியாகி பெரிய வசூலைப் பெற்றது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தையும் அப்படி வெளியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.