எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ராஜமவுலியின் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்டத் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படத்தை அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் இப்படத்தின் பாதிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள்.
அதனால், படத்தை அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி வெளியிட வாய்ப்பில்லை. எனவே, படத்தை அடுத்த வருட கோடை விடுமுறையில் தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம்.
'பாகுபலி 2' படம் கூட ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியாகி பெரிய வசூலைப் பெற்றது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தையும் அப்படி வெளியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.