பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து மூன்று முக்கிய சினிமா பிரபலங்கள் மறைந்தது ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்(61), இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விவேக் (59), இன்று இயக்குனர் கே.வி.ஆனந்த் (54) ஆகியோரது திடீர் மரணம் யாருமே எதிர்பார்க்காதவையாக அமைந்துவிட்டது.
இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த் இருவருமே சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தால் அதில் சமூகக் கருத்துக்களையும் பதிவிடும் விதத்தில்தான் படங்களை இயக்கியிருக்கிறார்கள். நடிகர் விவேக் அவருடைய படங்களில் சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை தனது நகைச்சுவை வசனங்களின் மூலம் பதிய வைத்துள்ளார்.
50 வயதிலிருந்து 60 வயதில் அவர்களுடைய மரணம் நிகழ்ந்தது அதிர்ச்சியானதுதான். இன்னும் பல வருடங்கள் அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதைப் பார்க்கிறோம்.
இவர்களின் மறைவு தமிழ் சினிமா உலகத்தையும் தாண்டி மற்ற மொழிக் கலைஞர்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.