ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து மூன்று முக்கிய சினிமா பிரபலங்கள் மறைந்தது ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்(61), இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விவேக் (59), இன்று இயக்குனர் கே.வி.ஆனந்த் (54) ஆகியோரது திடீர் மரணம் யாருமே எதிர்பார்க்காதவையாக அமைந்துவிட்டது.
இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த் இருவருமே சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தால் அதில் சமூகக் கருத்துக்களையும் பதிவிடும் விதத்தில்தான் படங்களை இயக்கியிருக்கிறார்கள். நடிகர் விவேக் அவருடைய படங்களில் சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை தனது நகைச்சுவை வசனங்களின் மூலம் பதிய வைத்துள்ளார்.
50 வயதிலிருந்து 60 வயதில் அவர்களுடைய மரணம் நிகழ்ந்தது அதிர்ச்சியானதுதான். இன்னும் பல வருடங்கள் அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதைப் பார்க்கிறோம்.
இவர்களின் மறைவு தமிழ் சினிமா உலகத்தையும் தாண்டி மற்ற மொழிக் கலைஞர்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.