சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து மூன்று முக்கிய சினிமா பிரபலங்கள் மறைந்தது ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்(61), இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விவேக் (59), இன்று இயக்குனர் கே.வி.ஆனந்த் (54) ஆகியோரது திடீர் மரணம் யாருமே எதிர்பார்க்காதவையாக அமைந்துவிட்டது.
இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த் இருவருமே சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தால் அதில் சமூகக் கருத்துக்களையும் பதிவிடும் விதத்தில்தான் படங்களை இயக்கியிருக்கிறார்கள். நடிகர் விவேக் அவருடைய படங்களில் சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை தனது நகைச்சுவை வசனங்களின் மூலம் பதிய வைத்துள்ளார்.
50 வயதிலிருந்து 60 வயதில் அவர்களுடைய மரணம் நிகழ்ந்தது அதிர்ச்சியானதுதான். இன்னும் பல வருடங்கள் அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதைப் பார்க்கிறோம்.
இவர்களின் மறைவு தமிழ் சினிமா உலகத்தையும் தாண்டி மற்ற மொழிக் கலைஞர்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.