Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்றே சொன்ன ரஜினி : டுவிட்டரில் டிரெண்டிங்

26 ஏப், 2021 - 23:13 IST
எழுத்தின் அளவு:
Rajini-political-decision-statement-trend-today

உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்று டுவிட்டரில் இன்று(ஏப்., 27) தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் களம் காண்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் கடந்தாண்டு அண்ணாத்த படப்பிடிப்பில் நடித்து வந்தபோது அங்கு படக்குழு சிலருக்கு கொரோனா பிரச்னை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதோடு, ரஜினிக்கு ரத்த அழுத்தம் பிரச்னையும் ஏற்பட்டது. அதுநாள் வரை அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வந்த ரஜினி பின்பு தன் முடிவை மாற்றிக்கொண்டார். உடல்நிலையையும், கொரோனா பிரச்னையையும் காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என கூறினார்.




இதுதொடர்பாக அப்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கடைசி சில வரிகளில் அவர் குறிப்பிட்ட விஷயம் முக்கியமானது. அதாவது, ‛‛இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை என தெரிவித்து இருந்தார்.

இப்போது இந்த வரிகளை சுட்டிக்காட்டி இன்று(ஏப்., 27) டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி கூறிய விஷயம் தான் இப்போது நாட்டில் நடக்கிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு என்ன நிலைமையில் தவித்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பல மாநிலங்களில் இந்நோய்க்கு ஆளானவர்களுக்கு மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து தான் அப்போதே அப்படி ஒரு அறிக்கையை ரஜினி கொடுத்தார். நிஜமாகவே பல உயிர்களை ரஜினி காப்பாற்றி உள்ளார். உண்மையான சூப்பர் ஸ்டார் அவர் தான் என கூறி டுவிட்டரில், #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டாக்கை ரசிகர்கள் வைரலாக்கினர். இந்த ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ரஜினியின் ரசிகர்கள் இதை வரவேற்று கருத்து பதிவிட்டனர்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
‛அந்தகன்' படப்பிடிப்பில் சமுத்திரகனி பிறந்தநாள் கொண்டாட்டம்‛அந்தகன்' படப்பிடிப்பில் ... கொரோனா பாதிப்பு : இயக்குனர் தாமிரா காலமானார் கொரோனா பாதிப்பு : இயக்குனர் தாமிரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

karutthu - nainital,இந்தியா
02 மே, 2021 - 13:04 Report Abuse
karutthu மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காமல் இருந்த மக்களுக்கு நன்றி
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
28 ஏப், 2021 - 16:27 Report Abuse
வால்டர் நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வருவேன். போலாம் ரைட்
Rate this:
மணி - புதுகை,இந்தியா
28 ஏப், 2021 - 07:12 Report Abuse
மணி அரசியலுக்கு வரலேன்னுட்டு ரெண்டாம் அலை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அய்தராபாத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி அண்ணாத்த சூட்டிங்கில இருக்காரு கொமாரு, அது தெரியாதா? குராந முடிஞ்சப்பறம் அண்ணாத்த சூட்டிங் முடிஞ்சப்பறம் வந்தாலும் வருவாரு...ரசிகப்பெருமக்களே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
Rate this:
Govindaran - Chennai,இந்தியா
28 ஏப், 2021 - 01:09 Report Abuse
Govindaran What's s wrong with that,he is doing his professional,he never shown interest in politics and he announced the decision which he come to politics that is completion of others and his fans.
Rate this:
27 ஏப், 2021 - 16:28 Report Abuse
சாம் முரட்டு தனமான முட்டு....
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in