ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவரும் சில தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த வருடம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
சஞ்சனா கல்ராணிக்கும் டாக்டர் அசிஸ் பாஷா என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. அப்போதெல்லாம் தனக்குத் திருமணமாகவில்லை என்று தெரிவித்தார் சஞ்சனா. ஆனால், அவருடைய அம்மா தன்னுடைய மகள் சஞ்சனாவுக்கும் அசிஸ் பாஷாவுக்கும் மூன்றரை வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடந்ததாகவும், அவர்கள் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்பின் சஞ்சனா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போது அவருடைய திருமண விவகாரம், முஸ்லிம் மதத்திற்கு அவர் மாறியது உள்ளிட்டவைகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் நடந்தது பற்றி பேசியுள்ளார் சஞ்சனா. அவருக்கும் அசிஸ் பாஷாவுக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கம் இருந்ததாம். கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும், அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.