இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரோனா தளர்வுகள் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது இந்தியாவிலிருந்து பல சினிமா பிரபலங்கள் மாலத் தீவிற்கு தொடர்ச்சியாக சென்று வந்தார்கள். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல சினிமா பிரபலங்கள் அங்கு சென்று வந்தார்கள். குறிப்பாக நடிகைகள் பலரும் மாலத் தீவுப் பயணத்தின் போது பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டினார்கள்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்து அங்கு தான் தேனிலவு சென்றார். சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து விதவிதமான புகைப்படங்களை தினமும் பதிவிட்டார். டாப்சி அவருடைய காதலருடன் சென்றார். சமந்தா, நாகசைதன்யா ஜோடி மற்றும் நடிகைகள் வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, ரைசா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால், பிக்பாஸ் ஷிவானி என பலர் அந்தப் பட்டியலில் அடக்கம்.
கடந்த வாரம் ஹிந்தி காதல் ஜோடி ஆலியா பட் - ரன்வீர் சிங், திஷதா பதானி, டைகர் ஷெராப் என பலரும் சென்றனர். தற்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வர மாலத் தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துவிட்டது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. ஆனால், கோவிட் காரணமாகத்தான் தடை செய்கிறோம் என குறிப்பிடவில்லை.
இத்தடை நீங்கும் வரை நமது சினிமா பிரபலங்கள் மாலத்தீவிற்கும் செல்ல முடியாது, கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட முடியாது.