மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
கொரோனா தளர்வுகள் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது இந்தியாவிலிருந்து பல சினிமா பிரபலங்கள் மாலத் தீவிற்கு தொடர்ச்சியாக சென்று வந்தார்கள். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல சினிமா பிரபலங்கள் அங்கு சென்று வந்தார்கள். குறிப்பாக நடிகைகள் பலரும் மாலத் தீவுப் பயணத்தின் போது பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டினார்கள்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்து அங்கு தான் தேனிலவு சென்றார். சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து விதவிதமான புகைப்படங்களை தினமும் பதிவிட்டார். டாப்சி அவருடைய காதலருடன் சென்றார். சமந்தா, நாகசைதன்யா ஜோடி மற்றும் நடிகைகள் வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, ரைசா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால், பிக்பாஸ் ஷிவானி என பலர் அந்தப் பட்டியலில் அடக்கம்.
கடந்த வாரம் ஹிந்தி காதல் ஜோடி ஆலியா பட் - ரன்வீர் சிங், திஷதா பதானி, டைகர் ஷெராப் என பலரும் சென்றனர். தற்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வர மாலத் தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துவிட்டது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. ஆனால், கோவிட் காரணமாகத்தான் தடை செய்கிறோம் என குறிப்பிடவில்லை.
இத்தடை நீங்கும் வரை நமது சினிமா பிரபலங்கள் மாலத்தீவிற்கும் செல்ல முடியாது, கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட முடியாது.