சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் தியேட்டர்களை முழுவதுமாக மூட உள்ளார்கள். இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்பதால் இன்றிலிருந்தே தியேட்டர்களை மூடிவிட்டார்கள். அரசு அறிவித்தபடி ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை நீடிக்குமா அல்லது அதற்கு மேலும் தொடருமா என்பது கொரானோ பரவலைப் பொறுத்தே அமையும்.
கடந்த வருடம் கொரோனா பரவிய போது தியேட்டர்களை மூடிய காரணத்தால், ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்து பல படங்களை வெளியிட்டார்கள். அது போல இந்த வருடமும் நடக்கலாம் என்ற பேச்சு ஏற்கெனவே எழுந்துவிட்டது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் கூட ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாகவே 'நெற்றிக்கண்' படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
மே மாதத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வந்தால் மேலும் பல புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.